Monday 14 November 2011

திமுக எதிர்ப்பாளர்களுக்கு…….


திமுக எதிர்ப்பாளர்களுக்கு…….



தமிழக அரசியல் களத்தில் அதிகம் விமர்ச்சிக்கப்படும் ஒரு அரசியல் கட்சி எதுவென்றால் திமுக தான். ஆட்சியில் இருந்தபோதும் அதை விமர்சித்தார்கள், ஆட்சியில் இல்லாமல் போய் 6 மாதமான பின்பும் விமர்சன கனைகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எதனால் இது?. இன்றைய ஆளும் கட்சியான அதிமுக தவறுகளே செய்யவில்லையா?. என யோசித்தபோது தற்போதைய நிலையில் ஆளும் தலைமை பலப்பல தவறுகள் நம் கண் முன்னே செய்கின்றன.

உதாரணத்திற்க்கு, கேபிள் டிவிக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. வரவேற்க்கத்தக்கது. ஆனால், சேனல்கள் பாதி வருவதில்லை. லோக்கல் சேனல்கள் தடை செய்கிறோம் என அறிவித்த அரசாங்கம். தற்போது சத்தம்மில்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் லோக்கல் சேனல்கள் நடத்த அனுமதி தந்துள்ளது. அதோடு எந்த லோக்கல் சேனல்களிலும் திமுக மற்றும் பிற கட்சியினர் தரும் அரசியல் விளம்பரங்களை உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு. ஆனால் ஜெ ஓட்டு கேட்கும் விளம்பரம் கட்டணம்மில்லாமல் ஒளிப்பரப்பாகின்றன. இது அதிகார துஸ்பிரயோகம்மில்லையா? திமுகவை விமர்சிப்பவர்கள் ஏன் இதுப்பற்றி பேசுவதில்லை. ஜெயலலிதா அரசாங்கம் செய்தால் சரியா?.

இரண்டாவது. சென்னையில் அரசுக்கு சொந்தமானயிடத்தை சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி கடந்த கால அதிமுக ஆட்சியில் நீண்ட கால குத்தகைக்கு எடுத்தவர் குத்தகை காலம் முடிந்தும் அதை அரசாங்கத்திடம் திருப்பி தரவில்லை. கடந்தமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தயிடத்தை போராடி மீட்டது. அந்தயிடத்தை ஆட்சிக்கு வந்து 5வது மாதத்தில் மீண்டும் அதே தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்த்துள்ளது அதிமுக. அதன் இன்றைய மதிப்பு 250கோடி. இதை திமுக தலைவர் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோது, உடனே ரியாக்ட் காட்டினார் ஜெ. எப்படி? திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய இடம் ஜமின் குடும்ப வாரிசுகளிடம்மிருந்து மிரட்டி பிடுங்கப்பட்டது என்றார். கருணாநிதி அண்ணா அறிவாலயம் நேர்மையாக வாங்கப்பட்டது, அதை உயிர் தந்தாவது காப்போம் என்றார். தோட்டக்கலை விவகாரத்தை மறந்தார். அதற்க்கு காரணம், ஜெ அதிகார போதையில் இருப்பவர். அவர் தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்க்காக அண்ணா அறிவாலயத்தை இடிக்கவும் செய்வார் என்பதாலயே அதை காக்க போராடுகிறார். திமுகவினர் ஆட்சி காலத்தில் அடித்து உதைத்து இடங்களை வாங்கினார்கள் என காவல்துறையை வைத்து வழக்குகள் பாய்ச்சியபோது சரியான நடவடிக்கை என்றவர்கள் ஜெ வின் இந்த 200 கோடி மதிப்புள்ள இடம் சுவாகா செய்யப்பட்டது பற்றி நடுநிலையாளர்கள் பேச மறுப்பது ஏன்?.

கடந்த காலங்களில் மக்களை பிச்சைக்காரர்களாக்கி வாக்குக்கு பணம் தருகிறார்கள் என திமுக மீது ஜெ குற்றச்சாட்டு வைத்தார், திமுக எதிர்ப்பாளர்களும் திமுக கொள்யைடித்த பணம், பண திமிர் என பேசினார்கள். அதிமுக ஆட்சியில் தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தான் வாரி இறைக்கிறார்கள். இதை பற்றி மூச் விட மறுக்கிறார்களே ஏன் ?. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆளும்கட்சியாக இருந்த திமுக காவல்துறையை வைத்து அரசியல் களத்தை குழப்புகிறது என்றார்கள். தற்போது அதிமுக காவல்துறையை வைத்து வெற்றியை நிர்ணயிக்க பார்க்கிறது இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சிகாலத்தில் திமுக அமைச்சர்கள் அரசு ஊழியர்களை மிரட்டினார்கள், அடித்தார்கள் என்றவுடன் கருணாநிதி கம்முனு இருக்கிறார் என குதியோ குதியென குதித்தவர்கள். அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் அம்மா அம்மிக்கல் மாதிரி இருக்க மாட்டார். அதிரடி காட்டுவார் என்றார்கள். தற்போது அதிமுக ஆட்சி தான் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விதி அமுலில் இருக்கும் போதே, அதிமுக அமைச்சர்கள், அவரது அடிப்பொடிகள் அதிகாரிகளை பத்திரிக்கையாளர்கள், மற்ற அரசியல் கட்சியினர் முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். திமுகவை பாய்ந்து பிராண்டிய பத்திரிக்கைகள் இந்த விவகாரத்தில் ஏன் வாய் மூடிக்கொண்டன. திமுகவை குற்றம் சொல்கிறவர்கள் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் வாழ்த்து கோஷங்கள் கேட்டன மறுப்பதற்க்கில்லை. அதேபோல் எதிர்கட்சியான அதிமுகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தந்து அவர்கள் கருத்தை பதிவு செய்ய விதிப்படி நேரம் ஒதுக்கப்பட்டது. பேசினார்கள், பதிவுகள் சட்டமன்ற கோப்புகளில் உள்ளது. ஜெ முதல்வாரன பின் சட்டமன்றம் கூடடியது, திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஒரேயிடத்தில் இருக்கை வேண்டும் என கேட்டு கேட்டு சலித்துப்போனார்கள், பேச நேரம் வேண்டும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற நேரம் கேட்டார்கள் ஆனால் எதற்க்குமே சபாநாயகர் அனுமதி தரவில்லையென திமுக வெளிநடப்பே செய்துக்கொண்டுயிருந்தன. இதை மூன்றாவது முறையாக முதல்வாரன ஜெ வெகுவாக ரசிக்கிறார். தான் மட்டுமே பேச வேண்டும், எதிர்ப்பே வரக்கூடாது என நினைக்கிறார். தான் பேசுவது எல்லாம் சரி என்கிறார். நாங்கள் மக்கள் மனதை பிரிதிபலிக்கிறோம் என திமுகவை விமர்சிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா?.

ஈழ விவகாரத்தில் கருணாநிதி நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களை கொன்ற கொலைக்காரர் என விமர்சிக்கப்பட்டது. ஈழ போரில் திமுகவுக்கும் பங்குண்டு மறுப்பதற்க்கில்லை. அதேபோல் கச்சத்தீவில் மீன் பிடிக்க போகிறவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் இதற்க்கு கருணாநிதி கடிதமே எழுதுகிறார். இதுவே ‘அம்மா’ ஆட்சியில் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்துயிருக்கும் என பேசிய சீமான் உட்பட தமிழ் உணர்வாளர்கள், நடுநிலைமையாளர்கள் இப்போது வாய் மூடி மவுனியாகி கிடப்பது ஏன்?. இப்போது மீனவர்கள் சுடப்படவேயில்லையா, ஈழத்தில் தற்போது பாலும், தேனும் ஓடுகிறதா? ஏன கேட்டால் இப்போதும் திமுக மீதே குற்றச்சாட்டு. ஆட்சியில இருந்தாலும் திமுக மீதே பழி, ஆட்சியில் இல்லாத போதும் திமுக மீதே பழி என்றால். அப்பறம் எதுக்கு அம்மா முதல்வராக வேண்டும் என கேட்டீர்கள். அவர் தான் பாயும் புலியாச்சே. பாய வேண்டியது தானே இலங்கை மீது?.

மெகா மகா வரலாற்று ஊழல் 2ஜி என பேசியவர்களே திமுக ஊழல் கட்சி தான். அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், பி.ஜே.பியில் இருப்பவர்கள் எல்லாம் நேர்மையின் உருவங்களா என்ன?. திமுக ஊழல் செய்தால் வீட்டுக்காக, மற்றவர்கள் செய்தால் நாட்டுக்காகவா செய்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க தான் தற்போது கட்சியே நடத்துகிறார்கள் அப்படியிருக்க ஊழல் நடந்துவிட்டது என கத்துவது வேடிக்கையானது. 10 ஆண்டுகளாக கோர்ட்டுக்கே போகமல் 100 முறைக்கு மேல் வாய்தா வாங்கியதை பற்றி பேசாமல் கிடப்பது ஏன்?.

ஊழல் செய்வதும், அதிகாரிகளை ரவுடிகளை வைத்து அடிப்பதும், ஆசிட் வீசுவது என்பதை தமிழக அரசியல்வாதிகளுக்கு கற்று தந்ததே ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தன் மீதான தீர்ப்பை விலை தந்து, கஞ்சா வழக்கை காட்டி மிரட்டி வாங்கலாம் என்ற உயரிய நீதிமன்ற பண்பாட்டை இந்தியாவில் பகிரங்கமாக கொண்டு வந்தது ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தனக்கு மேல் அதிகாரம் மிக்கவர்கள் தனக்கு ‘படியா’விட்டால் நாலாந்தர பெண் சொல்லும் குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைக்கலாம் என்பதை கொண்டு வந்தவர் யார்?.

கருணாநிதி அவரது குடும்பத்தார் அதிகாரத்தில் இருந்தபோது செய்த குற்றங்களை விட ஜெ-சசிகலா குடும்பங்கள் செய்த குற்றங்கள் மிக மிக அதிகம். ஆதார பூர்வமாக விளக்க முடியும்.

இது தெரிந்தும் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றன பத்திரிக்கைகள், நடுநிலை வேடதாரிகள் உட்பட பலர். இது எதனால் ?.

திமுக மக்களுக்காக செய்யும் என எதிர்பார்த்தார்கள் செய்யவில்லை அதனால் எதிர்க்கிறார்கள் இது ஒரு வகை. ஒருவரைப்பற்றி விமர்சிக்கும் போது அதை சார்ந்த சாதகமான கருத்துகள் வந்தால் அதைப்பற்றியே விமர்சிப்பது. தொடர்ந்து அதைப்பற்றியே அதிகம் பேச வைத்து விடுவது மற்றொரு வகை.( இது ஒரு வகை மனோவியாதி) அடுத்து, திமுகவை அழிக்க வேண்டும் என்ற மேல் சாதி பத்திரிக்கைகள், அதன் சார்ப்பானவர்கள், ஆளும் கட்சியை சார்ந்துயிருந்தால் லாபம் பார்க்கலாம் என்ற பத்திரிக்கைகள். இவர்கள் திமுகவை அழிக்க எந்த அஸ்திரத்தையும் எடுக்க தயங்காதவர்கள். அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்த வகையினர் தான் ஆதரிப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பார்கள் அவர்கள் எதிரில் இருப்பவர்கள் மீது பாய்வார்கள் இந்த வகையினர் தான் தற்போது திமுக மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

இது திமுகவிற்க்கு வீழ்ச்சியாகாது வளர்ச்சியை தான் தரும்.
நன்றி 
ராஜ்ப்ரியன்

Sunday 21 August 2011

இந்தப்பாலத்தில் கைவைத்துப் பாருங்கள், அம்மையாரே..!!!

சென்ற வாரம் அவசர வேலையாக  காட்டுமன்னார்கோவில் செல்லவேண்டியிருந்தது. மாயவரத்திலிருந்து சிதம்பரம் போய்தான் இதுவரையிலும் கா.ம.கோவில் செல்வது வழக்கம். அது தான் ஒரே வழியும் கூட. 65 கி.மீ தூரம்,  கடப்பதற்கு இரண்டுமணி நேரம் ஆகும்.

ஆனால் சென்ற ஆண்டு  தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட, நாகை மாவட்டத்தின் மணல்மேட்டினையும், தென்னாற்காடு மாவட்டத்தின் முட்டத்தையும் இணைக்கும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்ட, சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 2.8 கி.மீ நீளமுடைய பாலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது அதன் வழியாகச் சென்றால் விரைவில் செல்லலாம் என்று ஒரு நண்பர் சொன்னதை கேட்டு அதன்படியே பயணத்தை ஆரம்பித்தேன்.

மாயவரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மணல்மேட்டினை 20 நிமிட பயணத்தில் அடைந்தோம். அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றங்கரையில் பாலத்தின் முகப்பை அடைய சாலை போடும்பணி ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், அந்த இடத்தை அடைய 10 நிமிடம் ஆனது.

கொள்ளிடக்கரையை அடைந்தால் அந்த பிரம்மாண்ட பாலம் கண்முன்னே விரிகிறது. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பில்லர்கள் போடப்பட்டு தயாராய் நிற்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இணைக்கும் பணி கால்வாசி முடிந்த நிலையில் இருக்கிறது.

ஆற்றில் பில்லர் போடுவது தான் மிகவும் சிரமமான வேலை. அதை இணைப்பது விரைவாக முடித்துவிடக்கூடியது தான். அதன் அருகே அந்த பாலப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாகனங்கள் வந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் மண் சாலையில் தான் எங்களை அனுமதித்தார்கள்.

ஆற்றின் குறுக்கே மட்டும் அந்த பாலம் 1.1 கி.மீ தொலைவு வருகிறது. அக்கரை சென்றதும், முன்னால் மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சரான திரு. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களுடைய சொந்த ஊரான முட்டம் வருகிறது. அதிலிருந்து 8 கி.மீ தொலைவில் காட்டுமன்னார் கோவில்!

அதாவது ஆற்றைக் கடந்தவுடன் 15 நிமிடங்களில் காட்டுமன்னார் கோவிலை அடைந்துவிட்டோம். ஆக மயிலாடுதுறையிலிருந்து  சரியாக 50 நிமிடத்தில் அடைந்துவிட்டோம்!!

நம்பவே முடியவில்லை.!! ஒரு நல்ல ஆட்சியாளர் நினைத்தால் 65 கி.மீ தூரத்தை 30 கி.மீ ஆகவும், இரண்டு மணிநேர பயணத்தை 50 நிமிட பயணமாகவும் மாற்றமுடிகிறது!!!!

ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் உறுத்தலாக உட்கார்ந்து தொண்டையை அடைத்தது. நம் மக்கள் தவறுதான் செய்துவிட்டார்களோ என்று...!!!!

அம்மையாரே, உங்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்னால் முதல்வர் பார்த்துப் பார்த்துக் கட்டிய புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை முடக்கிப் போட்டிருக்கிறீர்களே(?) பத்திரிகைகள் எல்லாம் பறைசாற்றுவது போல் நீங்கள் தைரியம் மிக்க பெண்மணி என்றால் முன்னால் துணை முதல்வரால் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் கைவைத்துப் பாருங்கள்?!

நீங்களோ அல்லது உங்கள் அமைச்சர் பெருமக்களில் யாராவதோ அந்தப் பாலத்தைத் திறந்து வைக்கும் பொழுது தளபதி அவர்களின் புகழ்தான் காட்டாற்று வெள்ளம்போல கரைபுரண்டு மக்கள் மனங்களில் நிரம்பி வழியப்போகிறது!! அந்த வெள்ளத்தில் நீங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்படுவது உறுதி!!!

களவாணி கலைஞர்



வணக்கம் , வாருங்கள் , 
கலைவாணி கலைஞர் என்ற தலைப்பிற்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு ?
இன்றைய நிலையில் இணையத்தில் கலைஞரைத் பேசினால்தான் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது
தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ளட்டும்



தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. தனது மாணவர் பருவத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.தனது இளமை பருவத்தில், வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர் கழகம்" என்ற அமைப்பாக உருவாக்கி அதன்மூலம் மொழிபற்றையும் இனமான உணர்வை ஊட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குவளை தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் முதல் போராட்டம்

1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார். இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமின்றி, அவ்வாறு குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க இசைவு அளிக்கப்பட்டது. முதல் போராட்டத்தின் வெற்றி இது.

பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி

1938 இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

முதல் சொற்பொழிவு

1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசுலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.

முதல் அமைப்பு

19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென "தமிழ்நாடு" "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார்.

1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.

முதல் பத்தரிக்கை

1941 மாணவர்களிடையே எழுத்தாற்றலைச் சிறப்பாக வளர்க்க “மாணவநேசன்” என்ற மாத இதழைக் கையெழுத்து ஏடாகத் தொடங்கி நடத்தினார்.

முதல் விழா

1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்ப பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.

முதல் கட்டுரை

1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் “இளமைப்பலி” கட்டுரை எழுதிய இளைஞர் மு.கருணாநிதியை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வரச் செய்து நோரில் சந்தித்து தலைவர் கலைஞரின் எழுத்தாற்றலைப் பாராட்டினார். அத்துடன் படிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டச் சொன்னார். அண்ணாவின் அறிவுரைகளில் தலைவர் கலைஞர் செயல்படுத்தாமல் விட்டது இது ஒன்றுதான். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.

முதல் நாடகம்

28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் தலைவர் கலைஞாரின் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்த மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.

திருமணம்

11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

கலைஞர் மீது நடந்த முதல் தாக்குதல்

புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பொயாரைச் சந்தித்தார். பெரியார் தலைவர் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.

முதல் கொடி அமைப்பு

19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிhp அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார். கோவை ஜுபிடர் நிறுவனத்திற்கு கலைப் பணிபுரிய பெரியாரிடம் விடை பெற்றுச் சென்றார்.

தந்தை மறைவின் போது

19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க தலைவர் கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். தலைவர் கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின் மரணச் செய்தியோடு வந்தார்.

முரசொலி வார இதழை வெளியிட்டார்.

1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் தலைவர் கலைஞர் வடித்தார்.

துணைவியாரின் மறைவின் போதும்...

1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் தலைவர் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.

திருமண நாளிலும்...

1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் நம் தலைவர் கலைஞர்.

தி.மு.க தொடக்கம்.

17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. நம் தலைவர் கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர். 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும.1967ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அறிஞர் அண்ணா மறைந்த பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக் கொண்டு, சோதனைகள் நிறைந்த கால கட்டத்தில் முதல்வர் பொறுப்பினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினையும் ஏற்று, கழகத்தையும், கழகம் மேற்கொண்ட கடமைகளையும் காப்பாற்றிய பெருமையானது தலைவர் கலைஞருக்கு மட்டுமே உரிமையானது கழகம் பிளவுபட்ட காரிருள் வேளைகளிலும் கதிரவனாய் முன் நின்று தி.மு கழகத்தை காப்பவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவரின் வரலாற்றில்....

தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006

நின்றார்! வென்றார்!

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குக் கீழ்க்காணும் தொகுதிகளில் போட்டியிட்டுத் தலைவர் கலைஞர் பெரு வெற்றி பெற்றார்.

குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் - மேலவையில் 53 ஆண்டுகளாகப் பதவி வகிப்பவர். 1957 – லிருந்து 2006 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிச் சரித்திரம் படைத்தவர், படைத்துக் கொண்ட வருபவர்.


உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்
தமிழகம் முதல் இடத்தில்


* இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்,
* உயர் சிகிச்சைக்கான உயிர் காக்கும் கலைஞர் காப்பிட்டு திட்டம்,
* முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம்,
* மாற்று திறனாளிகளுக்கு அரசில் வேலை, வேலைக்கு சென்றுவர மூன்று சக்கர வாகனமும் இலவசம்.
* விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.
*குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்குமாடி வீடுகள் அமைத்து அவர்களைக் குடியேற்றினார்.
* தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும், இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.
* இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் கீர்திருத்தி அமைத்தார்.
* பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.
* தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர் பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.
* மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார்.
* பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.
* மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷாவை வழங்கினார்.
* ஏழையர்க்கு கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.
* தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.
* ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார்.
* தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.
* தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இடஒதுக்கீடு வழங்கினார்.
* கல்வித்துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை நடைமுறைப்படுத்தினார்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.
* மாநகராட்சி மேயருக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார்.
* மாநில சுயாட்சி குறித்து ஆராய்ந்திட ‘இராஜமன்னார் குழு’ அமைத்தார்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார்.
* கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.
* தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார்.
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கினார்.
* விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார்.
* ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார்.
* சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயரிட்டார்.
* நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
* தமிழ்நாட சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.
* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார்.
* சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.
* இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.
* கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீட வழங்கினார்.
* பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.
* மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றினார்.
* உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு
* அரசு அலுவலர்கள், அரசின் நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில், பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார்.
* நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.
* தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடைமை’ ஆக்கிட யோசனை கூறினார். (இதன் அடிப்படையில்தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார்.
* பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.
* அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.
* தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார்.
* எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000 (அதன்பின் ரூ.10,000- இப்பொழுது ரூ.15,000- திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்)
* ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
* சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுவலகம் கட்ட ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்தார்.
* தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றிய கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார்.
* உலகத் தமிழ் இணையம் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.
* தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.
* சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.
* தமிழர்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வரச் செய்தார்.
* தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார்.
* தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.
* கடல் சார் பல்கலைக் கழகம் அமைக்கச் செய்தார்.
* பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டைகள் வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
* தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிற்பித்தார்.
* எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமக்கப்பட்டது.
* கண்ணகி சிலை திறப்பு
* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல்
* நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்
* பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம்
* தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்
* நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு
* மருத்துவம், பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு
* மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல்
* பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம்
* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்
* அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்
* சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
* அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து
* அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு
* இளைஞர் சுய உதவி குழு அமைத்தல்
* சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வருதல்
* கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத்தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்ளுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.
* தலைவர் கலைஞர் அவர்களின் தன்னிகரில்லாப் பணிகள் இன்னும் பலப்பல.... பலப்பல.. பலப்பல.. தொடரும்... தொடரும்.....
என்னை பொறுத்தவரை உண்மையான தமிழ் இதயங்களை திருடிய களவாணி இவர்தான்.